என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பட்டாசு ஆலை அதிபர் பலி
நீங்கள் தேடியது "பட்டாசு ஆலை அதிபர் பலி"
வெம்பக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில் பட்டாசு ஆலை அதிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 47). இவர் நெல்லை மாவட்டம், வரகனூரில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.
கடந்த மாதம் இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு பெண் உள்பட 7 பேர் உடல் கருகி பலியானார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அய்யாச்சாமியை கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அய்யாச்சாமி ஜாமீன் பெற்று சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்தார்.
இந்த நிலையில் அய்யாச்சாமி, வெம்பக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது பட்டாசு ஆலைக்கு புறப்பட்டார்.
குகன்பாறை என்ற இடத்தில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் அய்யாச்சாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஆபத்தான நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அய்யாச்சாமி இன்று காலை பரிதாபமாக இறந்தார். வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 47). இவர் நெல்லை மாவட்டம், வரகனூரில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.
கடந்த மாதம் இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு பெண் உள்பட 7 பேர் உடல் கருகி பலியானார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அய்யாச்சாமியை கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அய்யாச்சாமி ஜாமீன் பெற்று சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்தார்.
இந்த நிலையில் அய்யாச்சாமி, வெம்பக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது பட்டாசு ஆலைக்கு புறப்பட்டார்.
குகன்பாறை என்ற இடத்தில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் அய்யாச்சாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஆபத்தான நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அய்யாச்சாமி இன்று காலை பரிதாபமாக இறந்தார். வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X